tamilnadu

img

பசுவை வதைத்ததாக 30 பேர் கைது....

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்திற்கு உட்பட்ட தப்ரனா கிராமம் ஆகும்.இங்கு பசுவை வதைத்ததாக கூறி, அப்சல் என்பவரை, அராஜகமான முறையில் போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர்.இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலீஸ் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று வாதாடியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தள்ளு-முள்ளுவைத் தொடர்ந்து, போலீசார் பலப்பிரயோகத்தை பயன்படுத்தி கிராம மக்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு கிராம மக்கள் கற்களை எடுத்துவீசியதாகவும், இதில், ஜின்ஜானா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் 3 போலீசார் காயம் அடைந்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.அதன்பேரில் கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள ஜின்ஜானா போலீசார், அவர்களில் அப்சல்உட்பட 30 பேரை, தற்போது கைது செய் துள்ளனர்.

;